ஆளுமை:சிவராசா, சேனாதிராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:21, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா
தந்தை சேனாதிராசா
பிறப்பு 1935.05.28
ஊர் வண்ணார்ப்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா, சேனாதிராசா (1935.05.28 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சேனாதிராசா. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றுத்தேறி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து விஞ்ஞானப் பட்டதாரியானதுடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று ஆசிரியர் சேவையில் இணைந்து தான் கல்வி கற்ற யாழ். இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராகச் சேவையிலிருந்து இளைப்பாறினார்.

சிவகவி, முக்கண்ணன், ஊடாடி, வண்ணைவராஜன் போன்ற புனைபெயர்களைக் கொண்ட இவர், நாற்பதிற்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளதோடு, பல சிறுகதைப் போட்டிகளிலும் பங்கு பற்றிப் பரிசில்களை வென்றார். தான் வாழ்ந்த சமூகத்தின் வாழ்க்கை முறைமைகளையும் ஆசிரிய வர்க்கத்தின் பின்புலத்தில் மறைந்து கிடக்கும் சிக்கல்களையும் தன் பேனாமுனை மூலம் புனைகதை இலக்கியங்களாகத் தந்துள்ளார். இறுதி ஆசை, நீர்க்குமிழி, போட்டி, காதலன், செய்த காரியம், நெறி என்பன இவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கி சிவாவின் சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 47


வெளி இணைப்புக்கள்

  • [na.com/பிரபலமானவர்கள்/எழுத்தாளர்-சிவராசா சே.சிவராசா பற்றி சி.சுதர்சன்]