ஆளுமை:சரவணமுத்து, ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்து
பிறப்பு
இறப்பு 2009.10.29
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்து, ச. ( - 2009.10.29) வானொலிக் கலைஞர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒருவர். "வானொலி மாமா" என்று அழைக்கப்பட்டார். இவர் ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றினார்.

இவர் திருக்கேதீச்சர ஆலய புனருத்தாரன சபையின் செயலாளர், கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவர் பதவி வகித்ததுடன் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 1966 - 2000 ஆண்டு வரை அங்கத்தவராகவும் பின்னர் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவியும் வகித்தார்.


இவர் ஆரம்பித்து வைத்த சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சி பல்லாண்டுகாலமாக நீடித்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி . இலங்கையர்கோனின் "விதானையார் வீடு" என்ற நாடகத்திலும் ஈழத்தின் முக்கியமான கலைஞர்களோடு இவர் நடித்திருந்தத குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராழுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சரவணமுத்து மாமா கலைத்துறையில மட்டுமல்லாது, சமய, சமூகப் பணிகளிலும் நெடுங்காலமாகச் சேவை செய்த பெரும் தொண்டன். திருக் கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு நெடுங்காலம் தொண்டாற்றியவர். கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராக இருந்து பல பணிகளில் ஈடுபட்டவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றித் தமிழ்த் தொணடு செய்தார்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 144-146
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 114-117
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணமுத்து,_ச.&oldid=195132" இருந்து மீள்விக்கப்பட்டது