ஆளுமை:சந்திரசேகரன், நல்லையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:59, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகரன்
தந்தை நல்லையா
பிறப்பு 1970.05.03
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன், நல்லையா (1970.05.03 - ) மாத்தளை, இறத்தோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நல்லையா. இவர் இறத்தோட்டை இந்து மகா வித்தியாலயத்திலும் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து தனது ஆசிரியர் பயிற்சியைக் கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் கலாசாலையில் கற்ற இவர், வேல்மட தமிழ் வித்தியாலயத்தில் பதிலதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

இவருடைய ஆக்கங்கள் பிரகாசம் இதழ், குறிஞ்சிப் பேரிகை நூல் ஆகியவற்றிலும் குன்றின் குரல், நீங்களும் எழுதலாம், மத்திய மாகாண சாஹித்திய விழா மலர், வீரகேசரி, தினக்குரல் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. மேலும் இவர் பத்திற்கும் மேற்பட்ட சிறுகதைப் போட்டிகளிலும் மூன்று பாடலாக்கப் போட்டிகளிலும் இரண்டிற்கும் மேற்பட்ட கவிதைப் போட்டிகளிலும் பரிசில்கள் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10132 பக்கங்கள் 04