ஆளுமை:குமரகுரு, நாகலிங்கம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:58, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குமரகுரு |
தந்தை | நாகலிங்கம்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமரகுரு, நாகலிங்கம்பிள்ளை அளவெட்டியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம்பிள்ளை. இவர் தமது தந்தையிடம் இளமையிற் தவிற்கலைப் பயிற்சி பெற்றுப் பின்னர் தவில் மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளையின் தந்தை மூளாய் ஆறுமுகம் பிள்ளையிடம் தவிற்பயிற்சி பெற்றார். பிரபல நாதஸ்வர வித்துவான்களான அளவெட்டி என். கே. பத்மநாதன், திரு. மெஞ்ஞானம், பல்லவி T. B. நடராஜ சுந்தரம்பிள்ளை, பந்தனை நல்லூர் தட்சணாமுர்த்திப் பிள்ளை ஆகிய பெரும் கலைஞர்களுடன் எல்லாம் இணைந்து தவில் வாசித்திருக்கின்றார். தவில் மேதை என்று புகழப்படும் இவர், தவில் மட்டுமல்லாது வயலின், செஞ்சிரா வாத்தியங்களை வாசிப்பதிலும் வல்லவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 573-574