ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, முருகர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:09, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணபிள்ளை
தந்தை முருகர்
பிறப்பு 1908.12.02
ஊர் வதிரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணபிள்ளை, முருகர் (1908.12.02 - ) யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகர். 1939ஆம் ஆண்டிலிருந்து நடிப்பு, தவில், ஆர்மோனியம், மிருதங்கம், எக்கோடியன், இசை போன்ற பல்வேறு துறைகளிலும் இவர் நாட்டம் கொண்டு காணப்பட்டார்.

இவர் தனது கலையார்வத்தால் 1939 ஆம் ஆண்டு கிருஷ்ணகான சபாவை நிறுவி, பல கலைஞர்களை இணைத்து கலைப்பணி ஆற்றினார். காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பிரகலாதன் போன்ற பல நாடகங்களை இவர் எழுதி இயக்கி வந்துள்ளார்.

முன்னாள் உதவி அரசாங்க அதிபர் திரு. தம்பிமுத்து அவர்களால் பல்கலை பண்டிதர் என்னும் பட்டமும் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் கலா மேதை என்னும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 147-148