ஆளுமை:கந்தையா, பொன்னம்பலம் (காந்தி ஐயா)
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கந்தையா |
தந்தை | பொன்னம்பலம் |
தாய் | நன்னிப்பிள்ளை |
பிறப்பு | 1918.12.19 |
ஊர் | மாதகல் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையா, பொன்னம்பலம் (1918.12.19 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் நன்னிப்பிள்ளை. இவர் நுணசை முருகமூர்த்தி வித்தியாசாலையிலும் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாசாலையிலும் கல்வி கற்று, சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், ஆசிரிய தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து வன்னியிலும் திருகோணமலையிலும் பணியாற்றினார்.
சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர், தமது நாற்பத்து நான்காவது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் காந்தியக் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தமையால் காந்தி ஐயா என அழைக்கப்பட்டார். அகில இலங்கைக் காந்திசேவா சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4413 பக்கங்கள் 55-61
- நூலக எண்: 13385 பக்கங்கள் 03-05