ஆளுமை:கணேசன், கந்தசாமிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:17, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கணேசன் |
தந்தை | கந்தசாமிப்பிள்ளை |
தாய் | தங்கமுத்து |
பிறப்பு | 1933.05.08 |
இறப்பு | 2002.08.09 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணேசன், கந்தசாமிப்பிள்ளை (1933. 05. 08 - 2002. 08. 09) இணுவிலைச் சேர்ந்த தவில் கலைஞர். இவரது தந்தை கந்தசாமிப்பிள்ளை; தாய் தங்கமுத்து.
பிரபல தவில் வித்துவான்களான இணுவில் இரத்தினம்பிள்ளையிடமும், திரு.சின்னத்தம்பி அவர்களிடமும் தவில் பயிற்சியைக் கற்று பின்னர், தனது சொந்த முயற்சியால் தவில் வாசிப்பதில் பிரபலமடைந்த இவர், தமிழ்நாடு திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திற்கும் மற்றும் பிரபலமான பலருக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் இந்திய அரசின் 'கலைமாமணி' பட்டத்தைப் பெற்றதுடன் தென்னிந்தியாவில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் நாதஸ்வரம் வாசித்துக் கலைஞர்களின் மதிப்பைப் பெற்றவர். தவில் வாத்தியத்தை விட கஞ்சிரா வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 570-571