ஆளுமை:பாலசுப்பிரமணியம், இராமசாமி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 20 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பாலசுப்பிரமணியம் |
தந்தை | இராமசாமி |
பிறப்பு | 1940.06.04 |
ஊர் | மாதனை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலசுப்பிரமணியம், இராமசாமி (1940.06.04 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இராமசாமி. இவர் 1952 ஆம் ஆண்டு முதல் கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.
1952ஆம் ஆண்டு மலருமா எனும் சமூக நாடகத்தில் நடித்ததன் மூலமாக நாடகத்துறையில் பிரவேசித்த இவர் அதனைத் தொடர்ந்து அனார்கலி, ஏழைப்பெண், இரத்தக்கண்ணீர் முதலான நூற்றுக்கும் மேற்ப்பட்ட இசை நாடகங்களையும் சமூக நாடகங்களையும் நடித்துப் புகழ் பெற்றார்.
இவரது கலைச்சேவைக்காக கலைமாமணி எனும் பட்டம் நவாலி Y. M. C.இனால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2003ஆம் ஆண்டில் நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தினாலும், 2005ஆம் ஆண்டில் பிரதேச கலை இலக்கியப் பெருவிழாவில் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையினாலும் பொன்னாடை போர்த்தி இவர் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 196-197