ஆளுமை:நித்தியானந்தசர்மா, வைத்தீஸ்வரசர்மா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நித்தியானந்தசர்மா
தந்தை வைத்தீஸ்வரசர்மா
பிறப்பு 1946.09.25
ஊர் மூளாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நித்தியானந்தசர்மா, வைத்தீஸ்வரசர்மா (1946.09.25 - ) யாழ்ப்பாணம், மூளாயைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர், சொற்பொழிவாளர். இவரது தந்தை வைத்தீஸ்வரசர்மா. கர்நாடக சங்கீதம், இசை கலந்த பிரசங்கம் ஆகியவற்றைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐயாக்கண்ணு தேசிகரிடம் பயின்று தேர்ச்சி பெற்ற இவர், பால பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழ் இலக்கியம், சமய புராண, இதிகாச வரலாறுகளை இசை பண்கலந்த சங்கீத கதாப்பிரசங்க வடிவில் வழங்கிவருவதுடன் ஆண்டுதோறும் நல்லூர்த் திருவிழாக் காலங்களில் இருபத்தைந்து நாட்களும் மேற்கு வீதியில் தொடராகச் சங்கீத கதாப்பிரசங்கத்தை நிகழ்த்தி வருகின்றார்.

இவர் கானகதாவாரிதி, இசைக் கதாமணி, முத்தமிழ் மாமணி, இராமாயணக் கதாதிலகம், முத்தமிழருவி, வாகீஸ கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றிருப்பதோடு பலமுறை கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 109