ஆளுமை:திருநாவுக்கரசு, தம்பிராசா (நாவேந்தன்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு
தந்தை தம்பிராசா
பிறப்பு 1932.12.14
இறப்பு 2000.07.10
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருநாவுக்கரசு, தம்பிராசா (1932.12.14 - 2000.07.10) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை தம்பிராசா. இவர் நாவேந்தன் என்னும் பெயரில் பிரபல்யமாகிச் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் பயிற்சி பெற்ற அரச பாடசாலை ஆசிரியராவார்.

இவர் தனது பதின்னைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்து தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன் போன்ற புனைபெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார். இவர் சமுதாய அவலங்களையும் சாதாரண மக்களின் பிரச்சினைகளையும் மூடத்தனங்களையும் தீண்டாமையையும் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார்.

இவர் யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிறுகதை, குறுங்காவியம், கட்டுரை நூல்கள், நாடகங்கள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். இவரது "வாழ்வு" என்னும் சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. அத்தோடு யாழ். இலக்கிய வட்டம் இவரது நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 242
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 44


வெளி இணைப்புக்கள்