ஆளுமை:ஜெகநாதன், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெகநாதன்
தந்தை பொன்னம்பலம்
தாய் தங்கமுத்து
பிறப்பு 1908.08.10
இறப்பு 1994.05.29
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகநாதன், பொன்னம்பலம் (1908.08.10 - 1994.05.29) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை பொன்னம்பலம்; இவரது தாய் தங்கமுத்து. தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர்கல்வியை வேலணை சரஸ்வதி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றதோடு, திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகித் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்து 1933 இல் வேலணை சரஸ்வதி உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்தார்.

சிறுவயது முதல் கவி புனையும் ஆற்றல் கைவரப்பெற்ற இவர், வேலணை புதுக்குளம் முத்துமாரி அம்மன் மீது பாமாலைகள் புனைந்துள்ளார். சமயப் பணிகளுடன் இலக்கியம், வரலாறு ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளதோடு பல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 260-265
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 233-240