ஆளுமை:செல்லையா, அம்பலவாணர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 24 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்லையா |
தந்தை | அம்பலவாணர் |
தாய் | பார்வதிப் பிள்ளை |
பிறப்பு | 1908.03.03 |
இறப்பு | 2004.09.12 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லையா, அம்பலவாணர் (1908.03.03- 2004.09.12) வேலணையைச் சேர்ந்த கல்வியியலாளர், அதிபர். இவரின் தந்தை அம்பலவாணர்; இவரின் தாய் பார்வதிப் பிள்ளை. இவர் 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி புரிந்ததால் பெரிய வாத்தியார் என அழைக்கப்பட்டார்.
இவர் கிராம சங்கத் தலைவராக இருந்து சிறிய ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற சேவைகளைச் செய்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 280-283