ஆளுமை:செல்லத்துரை, சுப்பிரமணியம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1938.03.28
ஊர் இளவாலை
வகை கலைஞர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, சுப்பிரமணியம் (1938.03.28 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த கல்வியியலாளர், நாடகக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் இளவாலை மெய்கண்டான் வித்தியாசாலையில் கல்வி கற்றார். மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும் இளவாலை மெய்கண்டான் வித்தியாசாலையில் அதிபராகவும் கடமை புரிந்துள்ளார்.

இவர் தமிழ் அறிவு புகட்டியதோடு தமிழ் நாடக வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். முதலில் பாடசாலையில் நடித்த 'உயிரிளம் குமரன்' நாடகம் இவரின் கலை ஆற்றலை வெளிப்படுத்தியதோடு 'ஆதவனே மன்னிப்பாய்', 'தணியாத தாகம்', 'தீந்தமிழ்த்தீ', 'மணியோசை', 'கலையால் அழிந்த கர்வம்' முதலான நாடகங்களை நெறியாள்கையும் செய்துள்ளார்.

இளவாலை இளம் குமரன் கலாமன்றத்துக்கு 25 நாடகங்களை எழுதிக் கொடுத்துள்ளார். இலக்கிய ஆக்கங்களாகக் கண்ணகி வழக்குரைத்தமை, மாயவன் செய்த மாயம், மண்ணாசை, கர்வபங்கம், இராவணன் என்பன இவரால் எழுதப்பட்டவையாகும். சமய நாடக ஆக்கங்களாக மெய்ப்பொருள் நாயனார், நாவலரானார், தருமத்தின்வழி என்பவற்றையும் ஆக்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 7478 பக்கங்கள் 49-65
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 24-25