ஆளுமை:குமாரகுலசிங்க முதலியார், சோடன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:55, 5 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குமாரகுலசிங்க முதலியார் |
தந்தை | சோடன் |
பிறப்பு | 1826 |
இறப்பு | 1884 |
ஊர் | தெல்லிப்பழை |
வகை | புலவர், அரச பணியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரகுலசிங்க முதலியார், சோடன் (1826 - 1884) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவரது தந்தை சோடன். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். இவர் மல்லாகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் பேச்சு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு முதலியார் பட்டத்தினை வழங்கியது. கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவரால் பாடப்பட்டுள்ளன. பதிவிரதை விலாசம் நாடக நூலையும் இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 85-86
- நூலக எண்: 11601 பக்கங்கள் 157-163