ஆளுமை:ரிஸ்னா, ஹலால்தீன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:49, 23 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றிஸ்னா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றிஸ்னா
தந்தை ஹலால்தீன்
தாய் நசீஹா
பிறப்பு
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றிஸ்னா, ஹலாதீன் பதுளை, தியத்தலாவயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஹலாதீன்; தாய் நசீஹா. இவர் கஹகொல்லை அல்பதுரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் தகவல் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

2004 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ள இவரது முதலாவது ஆக்கம் 'காத்திருப்பு' எனும் தலைப்பில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இடம்பெற்றது. அன்றிலிருந்து சுமாராக அன்றிலிருந்து 300 கவிதைகளையும்,30 சிறுகதைகளையும், 50 விமர்சனங்களையும் எழுதியுள்ளார். வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நமது தூது, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், ஜனனி, ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், நிறைவு, நிஷ்டை, அல் ஹஸனாத், அல்லஜ்னா, ஞானம், நீங்களும் எழுதலாம், வேகம், இருக்கிறம், பேனா, இனிய நந்தவனம் (இந்திய சஞ்சிகை) ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலையும் வைகறை, காக்கா குளிப்பு, மரத்தில் முள்ளங்கி, வீட்டிற்குள் வெளிச்சம், இதோ! பஞ்சு காய்கள் ஆகிய சிறுவர் கதைகளையும் திறந்த கதவுள் தெரிந்தவை - ஒரு பார்வை என்ற விமர்சன நூலையும் நட்சத்திரம் என்ற சிறுவர் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 5626 பக்கங்கள் 24