ஆளுமை:ஶ்ரீபிரசாந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீ பிரசாந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீ பிரசாந்தன் ஓர் எழுத்தாளர். கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சித்தியடைந்த இவர் ஶ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய இக்கால கவிதைகள் குறித்த ஆய்வரங்கில் இவர் ஈழத்து நவீன கவிஞர் மூவர் எனும் தலைப்பில் மகாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோர் கவிதை குறித்து ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தார். மேலும் தமிழ்நாடு விளிம்பு நிறுவனம் அந்தரத்துலவுகிற சோதி எனும் இவரது கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழககங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் அதி உயர் விருதான சி.வி.சி.டி. விருதை இவர் பெற்றுள்ளார். தொடர்ந்து அகில இலங்கை அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் மிகச் சிறந்த இளம் ஆய்வாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 2630 பக்கங்கள் 35
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஶ்ரீபிரசாந்தன்&oldid=177932" இருந்து மீள்விக்கப்பட்டது