ஆளுமை:சிவபாதசுந்தரம், சுப்பிரமணியபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதசுந்தரம்
தந்தை சுப்பிரமணியபிள்ளை
தாய் வள்ளியம்மா
பிறப்பு 1878.01.17
இறப்பு 1953
ஊர் புலோலி
வகை கல்வியியலாளர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதசுந்தரம், சுப்பிரமணியபிள்ளை (1878.01.17 - 1953) யாழ்ப்பாணம், புலோலியூரைச் சேர்ந்த கல்வியியலாளர், புலவர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாய் வள்ளியம்மா. இவரது தந்தை உட்பட வ.குமாரசுவாமிப் புலவர், வ.கணபதிப்பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரிடத்தில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் பயின்றார். மேலும் தென்னிந்தியாவில் உயர்தர ஆங்கில கல்வி கற்பதற்காகச் சென்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (B.A.)த் தேர்வில் சித்தியடைந்தார். அதன் பின் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய இவர் 1924ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக சுழிபுரம் விக்றோறியாக் கல்லூரில் அதிபராக கடமையாற்றினார்.

1939ஆம் ஆண்டில் இலங்கை கல்வி முறையினைத் திருத்தியமைப்பதற்காக நிறுவப்பட்ட ஆணைக்குழுவில் உறுப்பினராக செயற்பட்டு வந்த இவர் சைவபோதம், திருவருட்பயன் விளக்கவுரை, சைவக்கிரியை விளக்கம், கந்தபுராண விளக்கம், திருவாசக மணிகள், அளவை நூல், அக நூல், படிப்பிக்கும் முறைகளும் விதிகளும், திருப்பெருவடிவம், Saiva School of Hinduism, Essential of Logic, Gloriese of Sarvaism ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 116-117
  • நூலக எண்: 5973 பக்கங்கள் 49-52