ஆளுமை:பிரமிள், தருமராஜன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிரமிள்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரமிள்
தந்தை தருமராஜன்
தாய் அன்னலட்சுமி
பிறப்பு 1939.04.20
இறப்பு 1997.01.06
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரமிள், தருமராஜன் (1939.04.20 - 1997.01.06) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தருமராஜன்; தாய் அன்னலட்சுமி. இவர் நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும் முதன்மையான விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் விளங்கினார்.

ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்புக்கள் 1960இல் சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் தொடங்கியது. தொடர்ந்து இவர் கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம் ஆகிய கவிதை நூல்களையும் விமரிசன ஊழல்கள், ஶ்ரீலங்காவின் தேசிய தற்கொலை, தமிழின் நவீனத்துவம் ஆகிய விமர்சன நூல்களையும் ஆயி, லங்காபுரி நாஜா ஆகிய புனைகதை நூல்களையும் பிறேமிள் என்ற பேட்டி நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு பின்னும் இவரது பல நூல்கள் வெளிவந்தன.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 229-234