ஆளுமை:நீலாவணன், கேசகப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:09, 10 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நீலாவணன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நீலாவணன்
தந்தை சேகப்பிள்ளை
தாய் தங்கம்மா
பிறப்பு 1931.05.31
இறப்பு 1975.01.11
ஊர் பெரிய நீலாவணை, மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீலாவணன், சேகப்பிள்ளை (1931.05.31 - 1975.01.11) மட்டக்களப்பு, பெரியநீலாவணையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சேகப்பிள்ளை; தாய் தங்கம்மா. 1952 இல் இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளியானது. தொடர்ந்து 1953 இல் சுதந்திரனில் வெளியான ஓடி வருவதென்னேரமோ? எனும் கவிதை மூலம் இவர் கவிஞராக அறிமுகம் ஆனார். 1963 இல் எழுதிய மழைக்கை கவிதை நாடகம் முதன் முதல் மேடை ஏறிய இவரது கவிதை நாடகமாகும். மேலும் 1967இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, பாடும் மீன் என்னும் இலக்கிய இதழை நடத்திவந்துள்ளார். வழி, ஒத்திகை, ஒட்டுறவு ஆகிய இவரது கவிதைத் தொகுதிகளும் வேளாண்மை, நீலாவணன் காவியங்கள் ஆகிய காவியங்களும் நீலாவணன் பா நாடகங்கள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 67