ஆளுமை:சௌகத் கமால்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 8 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் றகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | அப்துல் றகுமான் |
பிறப்பு | 1940 |
இறப்பு | 2000 |
ஊர் | காலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துல் றகுமான் (1940 - 2000) காலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் காலியிலுள்ள அல் - இப்றாகிமிய்யா அரபுக் கலாசாலையில் மௌலவித் தராதரம் பெற்றதோடு தொடர்ந்து அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியர் பயிற்சிப் பெற்று வெளியேறினார். ஏறத்தாள 27 வருடங்கள் இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
இவரது குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நூலொன்று 1960இல் முதன் முதலாக வெளியானது. அதனைத் தொடர்ந்து பல மரபுக் கவிதைகளை எழுதியுள்ள இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி முதலான தினசரிகளிலும் குமரன், வெண்டாமரை, கதம்பம் ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 305-308