ஆளுமை:உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 5 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உமறு நெய்னா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உமறு நெய்னாப் புலவர்
தந்தை மதார்ஸா ஹஜ்ஜும்மா
பிறப்பு 1907.12.08
ஊர் மூதூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா ஹஜ்ஜும்மா (1907.12.08 - ) மூதூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மதார்ஸா ஹஜ்ஜும்மா. மூதூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்விப் பயின்ற இவர் 1939.05.04இல் ஆசிரியராக நியமனம் பெற்று மூதூர், கிண்ணியா, சம்பூர், தோப்பூர் ஆகிய இடங்களில் கடமையாற்றியுள்ளார்.

இவர் உமறு நெய்னாப் புலவர் புகாரிக் காவியம் என்னும் நாப்பதொன்பது கலிவிருத்தப் பாக்களாலான ஒரு நூல் செய்துள்ளார். மேலும் பெண்கல்வி எனும் தலைப்பில் ஏழு பாடல்களும், இஸ்லாமிய குறள் என்ற தலைப்பில் பத்து குறட்பாக்களும் அரேபிய நாட்டின் அன்றைய நிலை என்னும் தலைப்பில் பன்னிரண்டு விருத்தங்களும் இவர் செய்துள்ளதோடு பத்துக் குறட்பாக்களை சோபனம் எனும் தலைப்பில் எழுதியுமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 221-223