ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தில்லைநாதப்பிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் நாயகப் பிள்ளை
பிறப்பு 1885.04.18
இறப்பு 1966.07.05
ஊர் சரவணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாதப்பிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; தாய் நாயகப்பிள்ளை. பாட்டுப் புனைவது புலவருக்கு இயல்பாய் அமைந்த ஒரு கொடையாகும். அதற்கமைய இவர் ஆக்கி வெளிவந்த முதல் பக்தி இலக்கியப் பனுவல் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை ஆகும். இதனைத் தொடர்ந்து சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் எனப்பல பக்தி நூல்களை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 248-254
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 171-180