ஆளுமை:ஏகாம்பரம், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:34, 29 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஏகாம்பரம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏகாம்பரம்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1954.08.14
ஊர் வட்டுக்கோட்டை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏகாம்பரம், சின்னத்தம்பி (1954.08.14 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் 1986இலிருந்து அருள்நாதர் என்பவரிடம் ஓவியக் கலையைப் பயின்றார்.

காரைநகர் மடத்துக்கரை அம்மன் ஆலய வர்ண வேலைப்பாடுகள், வட்டுக்கோட்டை உடுக்கியவளை பிள்ளையார் ஆலயத்தில் சமய குரவர் நால்வரின் உருவப்படங்கள் வரைந்தமை, சித்தங்கேணி கண்ணா வைத்தியசாலி பெயர்ப்பலகை, சித்தங்கேணி ஶ்ரீ கணேசா வித்தியாலய முகப்பு பெயர்ப்பலகை வரைந்தமை போன்ற சேவைகளை இவர் ஆற்றியுள்ளார். 1979ல் நாதன் இசைக்குழுவில் அர்மோனியம் வாசித்து பலரது பாராட்டையும் பெற்றதோடு மெண்டலின் என்ற இசைக்கருவியையும் இவரே உருவாக்கம் செய்தார். மேலும் 1997இல்ராக நிலா என்ற பெயரில் ஓர் இசைக் குழுவினை தானே இயக்கி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 237