ஆளுமை:நந்தினி, சிவராஜன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:07, 29 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நந்தினி சிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நந்தினி சிவராஜன்
பிறப்பு 1959
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நந்தினி, சிவராஜன் (1959 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். கே. லக்‌ஷ்மணன், ஏரம்பு சுப்பையா, ந. வீரமணிஐயர் ஆகியோரிடம் பரதநாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை கற்ற இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நடனத்துறையில் பங்காற்றி வந்துள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் நடன ஆசிரியராகவும் கலைத்துறையில் சகல பரீட்சைகளிலும் பரீட்சகராகவும் கலைநிகழ்வுகளில் நடுவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

மாணவரிடையே கலைகளை வளர்த்தல், பிரதேச ரீதியாக கலைகளை வளர்த்தல், பரதகலாநிவேதன் நாட்டியாலயம் ஊடாக கலை அபிவிருத்தி பணி செய்தல், வட இலங்கை சங்கீத சபையின் ஊடாக கலைகளை வளர்த்தல், அகில இலங்கை ரீதியில் தேசிய மட்டக் கலை நிகழ்வுக்கு மாணவர்களை பயிற்றுவித்து வெற்றி பெறச் செய்தல் ஆகிய பணிகளை இவர் ஆற்றியுள்ளார்.

பரதசூடாமணி என்னும் பட்டத்தை அடையாறு சென்னையிலும், பரதகலா வித்தகர் பட்டத்தை வட இலங்கை சங்கீத சபையிலும், ஜனாதிபதியால் வித்தியாகீர்த்தி ஶ்ரீசமன் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 229