ஆளுமை:வரப்பிரகாசம், எலியாஸ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வரப்பிரகாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரப்பிரகாசம்
தந்தை எலியாஸ்
பிறப்பு 1930.08.18
ஊர் நீர்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரப்பிரகாசம், எலியாஸ் (1930.08.18 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை எலியாஸ். அண்ணாவியார் ஞானமுத்து அவர்களிடம் இவர் நாட்டுக்கூத்துக் கலையினைப் பயின்றார்.

சிறந்த கட்டிடக் கலைஞராக திகழ்ந்த இவர் 500க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளதுடன், நாடகங்களை நெறியாள்கையும் செய்துள்ளார். மேலும் பாடல்களை சிறப்பாக பாடும் திறமையும் இவர் கொண்டுள்ளார்.

நீர்வேலி மாதா கோவில் ஆலய சபையால் கலைஞான கற்பகம் எனும் பட்டத்தையும், கொழும்புத்துறை சனசமூக நிலையத்தால் கலைமாமணி மற்றும் மரபுக்கூத்திசைக் காவலன், யாழ்ப்பாண கலாசாரப் பேரவையால் யாழ் ரத்னா ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 218-219