ஆளுமை:பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ்
பெயர் | பாலச்சந்திரன் |
தந்தை | நீக்கிளஸ் மரியதாஸ் |
பிறப்பு | 1952.06.17 |
ஊர் | நாவந்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ் (1952.06.17 - ) யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிளஸ் மரியதாஸ். க. பொ. த. உயர்தரம் வரை கல்வி கற்ற இவர் பாடசாலை காலத்தில் இருந்தே கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
ஷேக்ஸ்பியரின் வெனிசின் வர்த்தகன் எனும் நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் யாழ்ப்பாண மறைக்கல்வி நிலைய நிகழ்ச்சிகளுக்காக இலங்கை வானொலி கத்தோலிக்கச் சேவையின் புதிய உலகம், சிறுவர் உலகம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கான புதுவரலாறு நாமே படைப்போம் எனும் நாடாவிலும் இவர் பாடியுள்ளார். மேலும் 1997இல் மன்னார் விடத்தல்தீவில் கல்வாரியில் கருணை மழை எனும் நாடகத்தினையும், 1999இல் ஞானசௌந்தரி எனும் இசை நாடகத்தினையும், 2004இல் கல்வாரி கண்ட கடவுள் எனும் நாடகத்தினையும் நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 195