ஆளுமை:பரராஜசிங்கம், பரஞ்சோதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:48, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரராஜசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராஜசிங்கம்
தந்தை பரஞ்சோதி
பிறப்பு 1949.01.03
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராஜசிங்கம், பரஞ்சோதி (1949.01.03 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பரஞ்சோதி. இவர் தனது ஆரம்பக் கல்வியை துன்னாலை மெ. மி. த. க. பாடசாலையிலும் தொடர்ந்து வதிரி திரு இருதயக் கல்லூரியிலும் கற்றார். இவர் இசை நாடகக் கூத்து, புராண படனம், பேச்சுத்துறை போன்ற கலைகளை அ. தெட்சணாமூர்த்தி ஐயர், ஆ. ச. க. சுப்பிரமணியம், வ. அ. தங்கராசா ஆகியோரிடம் பயின்றார்.

இவர் 1969ஆம் ஆண்டில் துன்னையூர் கலாசார கலா மன்றத்தினரால் மேடையேற்றப்பட்ட சிலம்புச்செல்வி இசை நாடகத்தின் மூலம் தனது சேவையை ஆரம்பித்தார். ஈழத்து இசை நாடக அரங்குகளில் கோவலன் கண்ணகி, வள்ளி திருமணம், பாஞ்சாலி சபதம், பவளக்கொடி, இலங்கேஸ்வரன், அரிச்சந்திரா, காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி போன்ற பல இசை நாடகங்களிலும் பல சீர்த்திருத்த சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஆலோசகராக செயற்படுகின்ற அகில இலங்கை இளங்கோ கழகத்தின் ஊடாகப் பட்டிமன்றம், தெய்வீகப் பேருரை, சமூக சீர்த்திருத்த நாடகங்கள், வில்லிசை போன்ற கலைகளை நிகழ்த்தி பல கலைஞர்களை உருவாக்கி வந்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராசா அவர்களினால் நாடகச்சக்ரவர்த்தி என்ற பட்டத்தையும் கலாநிதி செ. சுந்தரம்பிள்ளை அவர்களால் இசை நாடக நவரச கலைமணி என்ற பட்டத்தையும் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களால் கலைக்குரிசில் என்ற பட்டத்தையும் நாவலடி சக்தி தேவஸ்தானத்தினரால் கலை அருள்வேந்தன் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 193-194