ஆளுமை:தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தாமோதரம்பிள்ளை |
தந்தை | நாகலிங்கம் |
பிறப்பு | 1937.02.11 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம் (1937.02.11 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். தரம் 05 வரை கல்வி கற்ற இவர் நாட்டுக்கூத்துத் துறையில் கொண்ட ஆர்வத்தினால் 45வருடங்களிற்கும் மேலாக கலைச் சேவையாற்றி வந்துள்ளார்.
இவர் அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன், அதியரசன், பண்டார வன்னியன், ஞான சவுந்தரி ஆகிய கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் பல கலைஞர்களை கலையுலகிற்கு பிரசவித்த பெருமை இவரையே சாரும்.
இவரது கலைச் சேவைக்காக 2002ஆம் ஆண்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி, 2003ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையினால் கலைச்சுடர், தம்பாட்டி காந்திஜி நாடக மன்றத்தினால் ஆடற் கலைஞன் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 180