ஆளுமை:தணிகாசலம், முத்துக்குமாரு
பெயர் | தணிகாசலம் |
தந்தை | முத்துக்குமாரு |
பிறப்பு | 1934.04.15 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தணிகாசலம், முத்துக்குமாரு (1934.04.15 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்துக்குமாரு. 1955ஆம் ஆண்டுகளிலிருந்து சிந்து நடைக்கூத்து, நடனம், நாடக ஆக்கம், கவிதை ஆக்கம் போன்ற துறைகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் 1966ஆம் ஆண்டில் கரவெட்டி நவசக்தி மன்றத்திலும், 1977ஆம் ஆண்டில் பொலிகை கிழக்கு இளைஞர் மன்றத்திலும், 1976ஆம் ஆண்டில் மயிலிட்டி இளைஞர் நாடக மன்றத்திலும் காத்தவராயன் சிந்துநடைக்கூத்தை அரங்கேற்றியுள்ளார். மேலும் 1980ஆம் ஆண்டு முதல் மாதனை ஶ்ரீ கண்ணகை அம்மன் கோவில் திருக்கல்யாண விழாவிற்கு கிராம மாணவிகள் மூலம் கும்மி, கோலாட்டம், கரகம்ம், நாட்டிய நாடகம் என்பவற்றை அரங்கேற்றியுள்ளர்.
இவரது கலைத்திறமைக்காக பாரம்பரியக் கலைகள் மேம்பட்டுக் கழகத்தினால் நாட்டார் இசைக் கலைஞர் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 177