ஆளுமை:செல்வநாயகம், சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:23, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வநாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம்
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1937.02.01
ஊர் சுன்னாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம், சின்னத்துரை (1937.02.01 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் தபால் ஊழியராக கடமையாற்றியுள்ளார். ஐ. இராசரத்தினம், ஆ. நடராசா ஆகியோரிடம் கலைப்பயிற்சிப் பெற்ற இவர் 1958ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

ஔவையார், கை கொடுத்தான் விவசாயி முதலிய நாடகங்களில் முறையே புலவராகவும், விவசாயியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கூப்பன் பாண் எங்கே, பாரதியின் கண்ணீர் ஆகிய நாடகங்களில் இவர் பெண் பாத்திரம் ஏற்று நடித்தமையால் தபால் மந்திரி திரு. செல்லையா குமாரசூரியர் முன்னிலையில் பரிசு பெற்றுள்ளார்.

இவரது கலைத் திறமைக்காக முனிவர், விவசாயி, வள்ளிப்பிள்ளை ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 172