ஆளுமை:சிவசுப்பிரமணியம், நல்லதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:17, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசுப்பிரமணியம்
தந்தை நல்லதம்பி
பிறப்பு 1939.07.25
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், நல்லதம்பி (1939.07.25 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நல்லதம்பி. ஆரம்பக் கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், யாழ்ப்பாணம் வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்ற இவர் ச. செல்லத்துரை அவர்களிடம் கலைப்பற்றிய அறிவைப் பெற்று 1949ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன், சந்திரமதி, நாரதர், நல்லதங்காள், பாஞ்சாலி, மாதவி உட்பட பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் பருத்தித்துறை, வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் ஹாட்லி கல்லூரி, யாழ்ப்பாண மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை போன்ற பாடசாலைகளிலும் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன.

இவருடைய கலைப்பணிக்காக வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை இவரை பாராட்டி கௌரவித்ததோடு சிவசாயி கலாமன்றத்தினாலும், செல்லையா மெட்றாஸ்மயில் அவர்களாலும் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 161-162