ஆளுமை:சிதம்பரேஸ்வரன், நல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிதம்பரேஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரேஸ்வரன்
தந்தை நல்லையா
பிறப்பு 1952.03.07
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரேஸ்வரன், நல்லையா (1952.03.07 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. இவர் எஸ். எம். நடராசா, எஸ். நவரத்தினம், கலைமணி எஸ். வடிவேல் ஆகியோரிடம் கல்வி கற்ற இவர் 1960ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார்.

1968ஆம் ஆண்டிலிருந்து கண்ணகி வழக்குரைத்தல், மந்தரை சூழ்ச்சி, கவரி வீசிய காவலன் ஆகிய நாடகங்களுக்கு ஒப்பனையும், நெறியாள்கையும் செய்துள்ளார். அத்துடன் மார்க்கண்டேயர், இராவணேஸ்வரன், ஆகிய நாடகங்களும் இவரால் மேடையேற்றப்பட்டன. சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான காண்டம் போன்ற நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக 2008ஆம் ஆண்டில் வலிகாமம் தெற்கு கலாசாரப் பேரவையால் ஞானஏந்தல் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 159