ஆளுமை:சதாசிவம், சுந்தரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 18 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சதாசிவம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்
தந்தை சுந்தரம்
பிறப்பு 1929.02.29
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், சுந்தரம் (1929.02.29 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுந்தரம். இவர் சமூக நாடகம், இசை நாடகம் ஆகிய கலைகளை மு. கிருஷ்ணபிள்ளை, கலாவினோதன் அண்ணாசாமி, கவிஞர் மு. செல்லையா, அல்வாயூர் ச. தம்பிஐயா ஆகியோரிடம் பயின்று 1948ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை கலைச்சேவை ஆற்றியுள்ளார்.

பவளக்கொடி, அம்பிகாபதி, அல்லி அருச்சுனா, சம்பூர்ண அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி, பக்த பிரகலாதா, மார்க்கண்டேயர், சதி அகல்யா, சதி அனுசியா போன்ற நாடகங்களை இவர் நடித்துள்ளார். இவரது நாடகங்கள் திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்ரப்பட்டுள்ளன.

இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் முகமாக 2008ஆம் ஆண்டில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையால் இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 155