ஆளுமை:சதாசிவம், கந்தவனம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:52, 18 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சதாசிவம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்
தந்தை கந்தவனம்
பிறப்பு 1899.10.24
ஊர் வதிரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், கந்தவனம் (1899.10.24 - ) யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தவனம். அண்ணாவியார் செல்லப்பா அவர்களிடம் இசைக் கல்வியைப் பயின்ற இவர் தனது 17ஆவது வயதிலிருந்து இசைத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் இராமாயண 7 காண்டத்தையும் 7 இரவுகள் மேடையேற்றியுள்ளதோடு, அல்லி அருச்சுனா, பாஞ்சாலி சபதம், பவளக்கொடி, கோவலன் கண்ணகி, நல்ல தங்காள், கண்டி அரசன், பூதத்தம்பி, அரிச்சந்திரன், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களை கரவெட்டி, நெல்லண்டை, தும்பளை, வதிரி, நெல்லியடி, பொலிகண்டி, சாவகச்சேரி, கீரிமலை, மாவிட்டபுரம், ஆனைக்கோட்டை, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேடையேற்றியுள்ளார்.

இந்திய நடிகர் டி. ஆர். மகாலிங்கத்துடன் நடித்த காலங்களில் பொலிகை சதா என்றும் நாடக நடிகசிகாமணி என்றும் தியாகராஜ பகவதர் என்றும் பல பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 154