ஆளுமை:சச்சிதானந்தம், இரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 18 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சச்சிதானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தம்
தந்தை இரத்தினம்
பிறப்பு 1953.11.14
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தம், இரத்தினம் (1953.11.14 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். கூத்து, சிந்துநடைக்கூத்து, நாடகம், திரைப்பட இயக்கம், காவடி போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் 1960ஆம் ஆண்டுகளில் இருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இந்தியாவில் சென்னையில் Action - Direction என்பவற்றில் இவர் சித்தியடைந்துள்ளார்.

நூற்றுக்கணக்கான தென்மோடி, வடமோடி நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ள இவர் வளர்பிறை மன்றத்தினை உருவாக்கி அதனூடாக ஏழையின் வாழ்வு, ஆனந்தக் கண்ணீர், பாவமன்னிப்பு, சிங்கப்பூர் சுப்பன், உண்டியல், ஒரு சுமைதாங்கி சுமையாகின்றது, கேள்விகள், மனக்கோலம், அழியாத கோலங்கள், அகலாத நினைவுகள், பத்துரூபா, அம்மா, ஆரவல்லி சூரவல்லி போன்ற நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுள்ளார். அத்தோடு இந்தியாவிலும் இராமநாதபுரத்தில் அனார்கழி, திருமறையின் திறவுகோல், கல்லறையே கதவை மூடாதே போன்ற நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார்.

இவரது திறமைக்காக தென்புலோலியூர் வள்ளுவன் முத்தமிழ் கலா மன்றத்தினால் நடிப்புச் செம்மல் எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 152-153