ஆளுமை:குணசிங்கம், இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 18 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணசிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணசிங்கம்
தந்தை இளையதம்பி
பிறப்பு 1948.04.26
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணசிங்கம், இளையதம்பி (1948.04.26 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாட்டுக்கூத்து கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. இவர் அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை ஆகியோரிடம் தனது கலையைப் பயின்று 1975ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

இவர் அனலைதீவு, நாவாந்துறை, கொக்குவில், சரவணை, தம்பாட்டி, ஊர்காவற்துறை போன்ற இடங்களில் அதியரசன், அம்மன், பண்டார வன்னியன் ஆகிய நாட்டுக்கூத்துக்களை நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இவர் கலைக்கு ஆற்றிய சேவைக்காக 2005ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையால் கூத்து கலையரசு எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 150