ஆளுமை:கிறிஸ்தோப்பர், கிறகோரி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிறிஸ்தோப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிறிஸ்தோப்பர்
தந்தை கிறகரி
பிறப்பு 1949.06.08
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்தோப்பர், கிறகரி (1949.06.08 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகரி. 1966ஆம் ஆண்டு குருநகர் நெய்தல் வளர்பிறை மன்றத்தினால் மேடையேற்றிய இதயக்குமுறல் எனும் நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்ததன் மூலமாக இவருடைய கலைப்பயணம் ஆரம்பமானது.

1970ஆம் ஆண்டில் 48 உறுப்பினர்களைக் கொண்ட குருநகர் நெய்தல் வளர்பிறை மன்றத்தினை வழிநடத்தி வந்தார். வள்ளல் பாரி, நந்திவர்மன், செந்தூது, மலைமேற் கொலை, பண்டார வன்னியன் போன்ற நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து இவர் பல கலைஞர்களை உருவாக்கியுள்ளார். கொழும்பில் நடைப்பெற்ற தேசிய நாடக விழாவில் யாழ்ப்பாண பிரதேச கலைஞர்களை ஒன்றிணைத்து பண்டார வன்னியன் என்னும் நாட்டுக்கூத்தினை இவர் நடித்து நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மரபுக் கலைச்சுடர், யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையால் யாழ்ரத்னா முதலிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 149