ஆளுமை:கார்த்திகேசு, வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:20, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கார்த்திகேசு |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1952.11.14 |
ஊர் | மாதனை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகேசு, வேலுப்பிள்ளை (1952.11.14 - ) யாழ்ப்பாணம், மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் கந்தசாமி, பொ. சிவப்பிரகாசம், மோகனதாஸ், து. மகாலிங்கம், ந. சிவசுப்பிரமணியம் ஆகியோரிடம் கலைத்துறைப் பற்றிய அறிவைப் பெற்று 1968ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.
நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர் யாழ்ப்பாண கன்னாதிட்டி சிவன்கோவில் தேர், அச்சுவேலி வைரவர் கோவிலில் எலி வாகனம், புத்தூர் சிவன் கோவிலில் ஆட்டுகடா, வரணி பிள்ளையார் கோவிலில் பல்லக்கு, வல்லிபுர ஆழ்வார் ஐந்து தலை நாகம், மாவைக் கந்தனின் மஞ்சம் போன்ற மரத்தினாலன சிற்பங்கள் பல செய்துள்ளார்.
இவரது திறமைக்காக 2008ஆம் ஆண்டில் கலாசாரப் பேரவையால் கலைப்பருதி பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 146