ஆளுமை:ஆனந்தன், எ. வி.
பெயர் | ஆனந்தன் |
பிறப்பு | |
ஊர் | மல்லாகம் |
வகை | சிற்பக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆனந்தன், எ. வி. யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். மரபுரீதியாக சிற்பக்கலையை பயிலாவிட்டாலும் சிற்பத்துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளையும், அவர்தம் நூல்களையும் ஆதாரமாக கொண்டு தனக்குள் திறன்களை மெருகேற்றிக்கொண்டவர். இவற்றுக்கும் அப்பால் இவர் ஒரு தொழில் அதிபர், சிறந்த கவிஞர், சிறந்த நடிகராக திகழ்ந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதர் என்று கூறுகின்றார் திருமறைக் கலாமன்றத்தின் இயக்குனர் திருமிகு சவரிமுத்து அடிகளார் அவர்கள். இவர் உலக நாடுகள் பல சென்று சிற்பக் கலையின் நுட்பங்களை அறிந்து அதன் அழகையெல்லாம் ரசித்து நுணுக்கங்களை கற்றறிந்துகொண்டார். ஆனந்தன் அவர்களின் சிற்பக் கண்காட்சி திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் பல பாகங்கள் உட்பட அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 589-590