ஆளுமை:புஸ்பராணி, திருச்செல்வம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஸ்பராணி திருச்செல்வம்
பிறப்பு 1949.12.09
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஸ்பராணி திருச்செல்வம் (1949.12.09 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். ஆரம்பத்தில் தனது தந்தையிடம் தவில் இசையைப் பயின்ற இவர் பின்னர் தவில் மேதைகளான மாணிக்கம்பிள்ளை, இணுவில் என். ஆர். சின்னராசா ஆகியோரிடத்தில் தவில் கலை பற்றிய நுட்பங்களை கற்றறிந்து கொண்டார்.

நாற்பது வருடங்களுக்கு மேலான தவில் கலை அனுபவம் மிக்கவரான இவர் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதுமாக தனது தவில் இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா முதலான வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ள இவர் யழ்ப்பாண மாவட்டத்தில் தவிலிசையை வாசித்த முதற் பெண்மணியாக கருதப்படுகின்றார். களை பெற்றுக் கொண்டார்.

இவரது கலைப்பணியைப் பாராட்டி கரதிலக இசைச் செல்வி, தவில் இளவரசி ஆகிய பட்டங்களுடன் 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை பொன்னாடை போர்த்திக் கௌரவித்து கலைஞானச்சுடர் விருதும் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 117
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 98