ஆளுமை:கனகரத்தினம், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகரத்தினம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1947.10.09
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரத்தினம், ஆறுமுகம் (1947.10.09 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்; நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். ஆலயங்களில் சொற்பொழிவு ஆற்றுவதுடன் புராண படனங்களையும் ஓதிவந்தார். 1977ஆம் ஆண்டில் நாடகக் கலைஞனாகவும் அறிமுகமாகி அரிச்சந்திர மயான காண்டம், பட்டினத்தார், கோவலன் கண்ணகி முதலான நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் கண்ணகை அம்மன் மீது ஊஞ்சற் பாட்டு பாடியுள்ளதோடு விநாயகர் அனுபூதி என்னும் நூலிற்கு உரையும் எழுதியுள்ளார். இவரது ஆளுமையையும் இவராற்றிய கலைப்பணியையும் பாராட்டி சைவப்புலவர், திருமுறைச் செம்மல் ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 56