ஆளுமை:யோகேஸ்வரன், வைத்திலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகேஸ்வரன்
தந்தை வைத்திலிங்கம்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1960.05.03
ஊர் குப்பிளான்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யோகேஸ்வரன், வைத்திலிங்கம் (1960.05.03 - ) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை வைத்திலிங்கம்; தாய் அன்னப்பிள்ளை. இவர் வாசவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வரை கற்றார். பின்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தார்.

தனது ஏழாவது வயதில் சந்தி சிரிக்கிறது என்னும் நாடகத்தில் நடித்தார். இதுவே இவரது முதலாவது நாடகமாகும். பிற்பட சுமாராக ஏழு நாடகங்கள் வரையில் இவர் நடித்துள்ளார். புலம்பெயர் தேசத்தில் எழுத ஆரம்பித்து கவிதைகள், பாடல்கள், தத்துவச் சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள் என பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார். பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழலை வானொலியில் 1998ஆம் ஆண்டு ராகங்கள் என் காதில் என்ற இவரது முதல் கவிதை ஒலிபரப்பானது. இக்கவிதை இலண்டன் ஐ.பி.சி வானொலி முற்றத்து மல்லிகை என்ற நிகழ்ச்சியிலும் ஒலிபரப்பாகியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 125-127
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 101-103