ஆளுமை:வேணி, கிருபாகரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேணி கிருபாகரன்
தந்தை சின்னத்தம்பி
தாய் செல்லக்கிளி
பிறப்பு
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேணி கிருபாகரன் யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த ஆசிரியர்; எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லக்கிளி. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசலையிலும் ஸ்கந்தவரோதயா கல்லூரியிலும் கல்விப் பொதுத்தராதர உயர்தரக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு கல்வியியல் உயர்தகுதித் தராதரப் பட்டமும் பெற்று 1998ஆம் ஆண்டு மட்டுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர் பணையை ஆரம்பித்து 1999-2004 வரை முல்லைத்தீவு உடையர்க்கட்டு மகா வித்தியாலயத்தில் பணியாற்றினார். இதன் பின்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தார்.

எழுத்துலகில் இவரது முதலாவது ஆக்கமான பெண் என்ற சிறுகதை யாழ்ப்பாணத்தில் வெளிவந்த சுதந்திர பறவைகள் என்ற சஞ்சிகையில் 1991ஆம் அண்டு பங்குனி மாதம் வெளிவந்தது. தொடர்ந்து வெளிச்சம் முதலான ஈழத்து இதழ்களிலும் மண் (ஜேர்மனி), எரிமலை (பிரான்ஸ்) முதலான புலத்து இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 96-98
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேணி,_கிருபாகரன்&oldid=168676" இருந்து மீள்விக்கப்பட்டது