ஆளுமை:வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை
தந்தை சுப்பிரமணியம்
தாய் தையல்நாயகி
பிறப்பு 1921.05.04
ஊர் நாவற்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம் (1921.05.04 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் தையல்நாயகி. இவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தார்.

இவரது முதல் சிறுகதையான 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. இவரது சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. 1965 இல் இலங்கை கலைக்கழகம் நடாத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. ஏட்டிலிருந்து, கிராமராஜ்யம், பொன்னாச்சிக் குளம், நவயுகம் ஆகிய வானொலி நாடகங்களும் மண் வாசனை, பாற் காவடி, மணற்கோவில் சிறுவர் கதை இலக்கியம் ஆகிய நூல்களும் இவரால் வெளிவந்துள்ளன.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 65-66
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 50-51