ஆளுமை:மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:22, 4 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகாலிங்கசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலிங்கசிவம்
தந்தை பார்வதிநாதசிவம்
பிறப்பு 1968.06.21
ஊர் இளவாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம் (1968.06.21 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பார்வதிநதசிவம். இவர் தனது தந்தையிடமும், க. வீரகத்தி, க. உமாமகேஸ்வரன், பி. நடராசன் ஆகியோரிடமும் கல்விப் பயின்றார். இவர் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

தனது 19ஆவது வயதிலிருந்தே கலைப்பணியை ஆரம்பித்த இவர் 50க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் 10க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மேலும் குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும், பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை வாழ்வும் வகிபாகமும் ஆகிய இரு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 41-42