ஆளுமை:நடராசா, பிள்ளையினார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை பிள்ளையினார்
பிறப்பு 1939.08.14
ஊர் மயிலங்கூடல், இளவாலை
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, பிள்ளையினார் (1939.08.14 - ) யாழ்ப்பாணம் இளவாலை மயிலங்கூடலைச் சேர்ந்த கவிஞன். இவரது தந்தை பிள்ளையினார். மயிலங்கூடலூர் நடராசா என்றும், ஆடலிறை என்றும் பலராலும் அறியப்படும் இக் கலைஞர் ஒரு இளைப்பாறிய ஆசிரியர் ஆவார். இவர் பண்டிதம் என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து சிறப்பு பணியாற்றினார்.

சிறுவர் இலக்கியத்துறையில் இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளிவர இக் கவிஞர் காரணமாகவிருந்தார். ஈழத்துப் பத்திரிகைகளில் காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற மாற்றங்களை மையமாகக் கொண்டு இவரின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. இவரது ஆடலிறை குழந்தைப் பாடல்கள் நூல் யாழ்ப்பாணம் இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 22
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 35