ஆளுமை:செல்லையா, பொன்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையா
தந்தை பொன்னையா
பிறப்பு 1938.01.19
ஊர் மீசாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அ. பொ. செல்லையா (1938.01.19 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. 1968ஆம் ஆண்டுகளில் கொலைக்காரன் என்ற நாடகத்தின் மூலம் கலைத்துறையில் புகுந்த இவர் சிறந்த நடிகனாகவும், நெறியாளனாகவும் விளங்கியதோடு சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

காலத்தின் விதி, தாய்க்குலமே, விழியூ எழுயூ, நான் கண்ட அண்ணன் போன்ற நூல்களையும், மன்னாக்குடி மாத்தான்டன், நஞ்சன் நாகப்பா, இரும்புத் தலைவன், ஒன்றே குலம் போன்ற நாடகங்களையும் வஞ்சியின் செல்வன், மணமாற்றம், தலை எடுத்தான் தம்பி போன்ற வானொலி நாடகங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், பிரச்சார பிரசங்கி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 95-96
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 25