ஆளுமை:சிங்கராயர், முடியப்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:34, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிங்கராயர்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிங்கராயர்
தந்தை முடியப்பு
பிறப்பு 1938.02.24
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிங்கராயர், முடியப்பு (1938.02.24 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முடியப்பு. இவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்புத்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும், கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் பயின்றார். மேலும் சி. ஞானப்பிரகாசம், செ.செல்வரத்தினம், வ. தியாகுப்பிள்ளை போன்றோர்களிடமும் கல்விப் பயின்றார்.

தனது 20ஆவது வயதில் எழுத்துத்துறையில் நுழைந்த இவர் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு, பாதுகாவலன் ஆகிய பத்திரிகைகளிலும் ஆக்கங்களைப் படைத்துள்ளார். இவரது முதலாவது சிறுகதையான நப்பாசை 1964ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து பாஷையூரானைப் பாடு, தூது போ தென்றலே, வியாகுல அன்னை வெண்பா, கூவிப்பற்ந்த கோகிலங்கள், மடு அன்னைப் பிள்ளைத்தமிழ், செம்மனந்தான் போன்ற நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 17