ஆளுமை:சண்முகலிங்கம், ஐயாத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகலிங்கம்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு 1946.08.01
ஊர் குப்பிழான்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம், ஐயாத்துரை (1946.08.01 - ) யாழ்ப்பாணம், குப்பிழானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையின் உபதலைவராகவும் கட்டைவேலி நெல்லியடி பல் நோக்கு கூட்டுறவுச் சங்க கலாசாரப் பெருமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

தனது இருபதாவது வயதிலிருந்து அதாவது 1966ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர் கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், அறிமுகங்கள் - விமர்சனங்கள் - குறிப்புக்கள் - பத்தி எழுத்துக்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் இலங்கை வானொலியில் கவியரங்கம், சிறுவர் நாடகம், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். அலை கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இவர் இருந்ததுடன் ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தும் பணியாற்றியுள்ளார்.

இவரது கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைக்கு 1976ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது.அத்துடன் இதுவரை 2007ஆம் ஆண்டு வடமராட்சி தெற்கு மேற்கு கலாசரப் பேரவை தமது வருடாந்தக் கலாசார விழாவின் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரை கௌரவித்து பெருமை அடைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15