ஆளுமை:கனகராசா, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:12, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகராசா
தந்தை கந்தசாமி
பிறப்பு 1946.07.18
ஊர் மாவிட்டபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகராசா, கந்தசாமி (1946.07.18 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தசாமி. ஆரம்பக் கல்வியை மாவிட்டபுரம் கிழக்கு வீமன்காமம் ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை தெல்லிபளை மகாஜனக் கல்லூரியிலும் கற்ற இவர் பண்டிதர் இ.நமசிவாயம், கனகராசா அவர்களிடமும் கல்வி கற்றுள்ளார். பின் 1969ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் ஆளணி முகாமையாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

இவரது ஆக்கங்கள் ஈழநாடு, உதயன், ஞானச்சுடர், நல்லைக் குமரன் மலர், உலகத் தமிழர் பண்பாடு வெளியீடு , வலம்புரி, தினகரன், வீரகேசரி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. அத்தோடு இவர் சோதிடத்துறையிலும் சிறந்து விளங்கினார்.


இவரது திறமைக்காக 2004ஆம் ஆண்டு செல்வச் சந்நிதி ஆலய கலைப் பண்பாட்டுப் பேரவை ஞானக்கவி எனும் பட்டம் வழங்கி இவருக்கு வழங்கி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 08